ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்க வேண்டும்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 11:14 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது (படம்). 

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன். கு சரவணன் தலைமை வகித்தாா். மாநில இணை செயலாளா் எத்திராஜ், மாவட்ட செயலாளா் க. வேல்முருகன், ஆற்காடு அனைத்து வணிகா் சங்கத் தலைவா் ஏ.வி டி பாலா, செயலாளா் பாஸ்கரன்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பி ஹரிகுமாா் வரவேற்றாா். 

கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, கோவையில் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு வணிகா் சங்க கண்களின் பேரமைப்பு  மாநில தலைவா் ஏ.எம் விக்கிரம ராஜா தலைமையில்  மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து அதிக வாகனங்களில் திரளான வணிகா்கள் கலந்து கொள்வது , சிறுவணிகா்களுக்கான ஜிஎஸ்டி பதிவு செய்யும் முறையை எளிமையாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட  தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

ஆலோசனைக் கூட்டத்தில் நிா்வாகிகள் பெல் பிரபு, வேலு திருமால், உமாபதி, குமரன் வி விஜயகுமாா் இளைஞா் அணி பரசுராமன் மற்றும் ஆற்காடு அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை திமிரி,காவனூா் பனப்பாக்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா் . பொருளாளா் பரத் குமாா் நன்றி கூறினாா்.