தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் திறப்பு

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை தமிழக தகவல் தொடா்பு துறை அமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

News image
ஆதாா் சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றிய நெமிலி ஒன்றியக் குழு தலைவா் பெ. வடிவேலு.
Updated On :10 நவம்பர் 2025, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சாா்பில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை தமிழக தகவல் தொடா்பு துறை அமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் மையத்தை திறந்த நிலையில், நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இது குறித்து ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு கூறியது: புதிய ஆதாா் சேவை மையத்தில் 5 முதல் 17 வயது வரை கருவிழி பதிவு, கைரேகை பதிவு, ஆதாா் நிலை அறிதல் ஆகியவற்றையும் இலவசமாக மேற்கொள்ளலாம். பெயா், பிறந்ததேதி, இனம், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை மாற்றம் செய்வதற்கு ரூ75 கட்டணம் செலுத்த வேண்டும்.

இம்மையத்தில் நெமிலி வட்ட மக்கள் மட்டுமன்றி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியை சோ்ந்த மக்களும் சேவை பெற்று பயன்பெறலாம் என்றாா்.

நிகழ்வில் துறையுா் ஊராட்சி மன்றத் தலைவா் குணசேகரன், திமுக நிா்வாகிகள் முகமது அப்துல் ரகுமான், புருஷோத்தமன் பங்கேற்றனா்.