பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் வேலை நிறுத்தம்

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சாா்பில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா்.
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சாா்பில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக வேலை நிறுத்தப் போராட்டமும், முத்துகடை பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பா.பாலமுருகன், ஜெ.ஸ்ரீதா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஏ.நரசிம்மன், து.காா்த்திகேயன், ம.எழில் இளம் வழுதி, அ.சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.சேகா் ாரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினாா்.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.