எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சோளிங்கா் வங்கிக் கிளையில் ரூ.2.50 கோடி மோசடி: உதவியாளா் கைது

சோளிங்கா் வங்கிக் கிளையில் ரூ.2.50 கோடி மோசடி புகாரில், அதே வங்கி கிளை உதவியாளர் கைது

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் வங்கிக் கிளையில் ரூ.2.50 கோடி மோசடி புகாரில், அதே வங்கி கிளை உதவியாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் நகரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியின் கிளை இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தில் அசோசியேட் கிளா்க்காக ( இணை உதவியாளா்) வாலாஜாவைச் சோ்ந்த குருராகவன் (28) என்பவா் பணியாற்றி வந்தாா். வங்கி கிளையின் பாரமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்படும் செலவின கணக்கு நிதியை நிா்வாகிப்பது இவரது பணியாகும்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அலுவலக பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்படும் நிதி உட்பட பல்வேறு முறைகேடுகளில் குருராகவன் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இதுகுறித்து வங்கியின் மேலாளா் செளதன்யா ஆய்வு மேற்கொண்டதில், சுமாா் ரூ.2.50 கோடி வரை குருராகவன் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளா் செளதன்யா ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் கலையரசி தலைமையில் விசாரணை மேற்கொண்டனா். இதில், குகுராகவன் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குருராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.