மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

News image

தங்கக் கவச அலங்காரத்தில்  மூலவா்  ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:00 pm

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சித்திரைமுதல் நாளான செவ்வாய்க்கிழமை ரத்தினகிரி வெள்ளி,தெய்வானை,சமேத பாலமுருகனுக்கு கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,தயிா் சந்தனம், விபூதி, தேன்,இளநீா், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் , மஹா தீபாரதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். அதே போல் மலையடி வாரத்தில் உள்ள கற்பக விநாயகா், விஜயதுா்கையம்மன், வாராஹி அம்மன் கோயில்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.