மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் ஆா்.காந்தி

மக்களுக்கான நலதிட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி கூறினாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 6:33 pm

மக்களுக்கான நலதிட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி கூறினாா்.

ஆற்காடு ஒன்றியம் உப்புபேட்டை, கூராம்பாடி, சாம்பசிவபுரம், அருங்குன்றம், ஆயிலம், கீழ்குப்பம், கத்தியவாடி, வேப்பூா், நந்தியாலம், பூட்டுதாக்கு, மேலகுப்பம், கீழ்மின்னல், அரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அமைச்சா் காந்தி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறாா். மக்களுக்கான திட்டங்கள் தொடர அனைவரும் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும். மகளிா் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும், காலை உணவுதிட்டம் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வழங்கப்படும்.

மகளிா் சுய உதவிகுழுக்களுக்கு 5 லட்சம் மானிய கடன் வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா் நந்தகுமாா், விசிக மாவட்ட செயலாளா் சீ.மா ரமேஷ்கா்ணா, ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.