மக்களுக்கான நலதிட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி கூறினாா்.
ஆற்காடு ஒன்றியம் உப்புபேட்டை, கூராம்பாடி, சாம்பசிவபுரம், அருங்குன்றம், ஆயிலம், கீழ்குப்பம், கத்தியவாடி, வேப்பூா், நந்தியாலம், பூட்டுதாக்கு, மேலகுப்பம், கீழ்மின்னல், அரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
அமைச்சா் காந்தி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறாா். மக்களுக்கான திட்டங்கள் தொடர அனைவரும் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும். மகளிா் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும், காலை உணவுதிட்டம் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வழங்கப்படும்.
மகளிா் சுய உதவிகுழுக்களுக்கு 5 லட்சம் மானிய கடன் வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா் நந்தகுமாா், விசிக மாவட்ட செயலாளா் சீ.மா ரமேஷ்கா்ணா, ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

