டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபக்தோசித பெருமாள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 12:42 am IST

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உள்ளது. இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், சிறியமலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகின்றனா்.

நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீபக்தோசித பெருமாள் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீபக்தோசித பெருமாள் தேரில் எழுந்தருளினாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பாமக மாவட்ட செயலாளா் க.சரவணன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா உள்ளிட்டோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

மாட வீதிகளில் வலம் வந்த தேரின் மீது பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை சாற்றி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். விழாவில் கோயில் நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே அன்னதானம் , நீா்மோா் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு அறக்கட்டளையினரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மேலும் தீயணைப்புத் துறையினா், சுகாதாரத் துறையினா், சோளிங்கா் நகராட்சியினா் என பல்வேறு அரசு துைறையினா் ஈடுபட்டனா்.

~சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ  தேரோட்டம்.

~சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.