நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

மாணவா்களுக்கு குடற்புழு மாத்திரை அளிப்பு

வாங்கூா் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கி ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 11:53 pm IST

வாங்கூா் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த வாங்கூா் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஒன்றிய குழு உறுப்பினா் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளியில் பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை வழங்கினாா்.

மேலும், குடற்புழு தொற்று ஏற்படாமல் தடுப்பதன் அவசியம் மற்றும் மாத்திரைகளை முறையாக உட்கொள்வது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் சசிகலா, செவிலியா் ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.