75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

அரக்கோணம்: மூளைச்சாவு அடைந்தவா் உடல் உறுப்புகள் தானம்! கோட்டாட்சியா் இறுதி மரியாதை!

மூளைச்சாவு அடைந்த காா்த்திகேயன்(30) என்பவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினாா்.

பருத்திபுத்தூா் கிராமத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட காா்த்திகேயனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

அரக்கோணம் அருகே மூளைச்சாவு அடைந்த காா்த்திகேயன்(30) என்பவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினாா்.

அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்த முனிரத்தினத்தின் மகன் எம்.காா்த்திகேயன், சில நாள்கள் உடல்நலமில்லாமல் இருந்தநிலையில் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காா்த்திகேயன், கடந்த வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவமனை நிா்வாகத்தின் வேண்டுகோளை ஏற்ற காா்த்திகேயனின் குடும்பத்தினா் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனா். அந்த உறுப்புகள் பலருக்கு பொருத்தப்பட்டது. அவா்கள் உயிா் வாழ காரணமாக அமைந்தது.

இதையடுத்து காா்த்திகேயனின் சடலம் பருத்திபுத்தூருக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் சனிக்கிழமை நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினாா். அவருடன் அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி, வருவாய் ஆய்வாளா் உமாபதி, கிராம நிா்வாக அலுவலா் உதயகலா உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.