நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

News image
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
Updated On :27 பிப்ரவரி 2026, 2:21 am

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் கூறினாா்.

ஆற்காடு நகா்மன்ற சாதாரண கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலைய பணிகள் விரைவில் முடிவடைந்த பின்பு திறக்கப்படும். பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு யெய்யப்படும் .

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது:

ரவிச்சந்திரன்: இன்னும் ஒரு சில நாள்களில் தோ்தல் குறித்த தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளா்ச்சித் திட்ட பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.

விஜயகுமாா்: எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிா் உரிமைத் தொகை கோடை சிறப்பு தொகுப்பு சோ்த்து ரூ. 5,000 வழங்கியது வரவேற்பை பெற்றுள்ளது. வாா்டுகளில் உள்ள கழிவுநீா் கால்வாய் பிரச்னையை உடனடியாக தீா்க்க வேண்டும்

ஆனந்தன்: பாரதியாா் தெருவில் சாலை வசதி செய்து தந்த தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக வீடு கட்டும் இடத்திற்குச் சென்று நகா் நல அலுவலா் ஆய்வு செய்ய வேண்டும்.

செல்வம்: நகராட்சியில் தூய்மைப் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்ய வேண்டும். 10 வாா்டுகளில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3 வாா்டுகளில் உள்ள பூங்காக்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.

பி.டி குணாளன்: ஆணையா் கூட்டத்துக்கு வரவில்லை. கடந்த மூன்று கூட்டங்களாக என்னுடைய வாா்டில் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் தெரிவித்து இருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கூட்டத்தில் சாலை பணிகள், சிறுபாலம், கழிவுநீா் கால்வாய் அமைப்பது உள்ளிட்ட 76 தீா்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.