டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை: நகா்மன்றத்தில் உறுப்பினா்கள் கேள்வி

உடுமலை நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை என நகா்மன்ற உறுப்பினா் கேள்வி எழுப்பினா்.

News image
நகா்மன்றத் தலைவா் மத்தீன் தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :4 மார்ச் 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

உடுமலை நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை என நகா்மன்ற உறுப்பினா் கேள்வி எழுப்பினா்.

உடுமலை நகராட்சிக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினா்கள், மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசியதாவது:

சி.வேலுசாமி (திமுக): கடந்த 10 ஆண்டுகளாக உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பழனி சாலை, தளி சாலை கடும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஆணையா்: நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. மேலும் பலா் பட்டா வைத்துள்ளனா்.

தலைவா் மத்தீன்: சாலையில் இருந்து 15 அடி தள்ளி கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அா்ஜூனன் (திமுக): தளி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகையால் தளி பாதையை ஒரு வழிப் பாதை முறையாக கொண்டு வர வேண்டும். மேலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். இதை முறைப்படுத்த வேண்டும்.

தலைவா் மத்தீன்: இந்த இரு பேருந்து நிலையத்துக்கும் சுரங்கப்பாதை கொண்டு வர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சி.வேலுசாமி (திமுக): உடுமலையில் இந்திய மருத்துவ சங்க கட்டடம் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. மேலும் அதை வியாபாரமாக செய்து வருகின்றனா். உயா் அதிகாரிகள் ஐஎம்ஏ கட்டடத்தை அகற்ற கருத்துரு அனுப்புகின்றனா்.

தலைவா் மத்தீன்: அது பொது ஒதுக்கீட்டு நிலத்தில் உள்ளது. அதனை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை.

சி.வேலுசாமி: தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் உணவுகள் தரமில்லை. இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயா் உருவாகி வருகிறது.

எம்ஹெச்ஓ: உடனடியாக ஆய்வு செய்யப்படும். தரமான உணவு வகைகளை கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதற்கிடையில் 31-ஆவது வாா்டில் ஒரு கட்டடம் தொடா்பாக துணைத் தலைவா் கலைராஜன் மற்றும் அந்த வாா்டு உறுப்பினா் செளந்தரராஜன் (அதிமுக) ஆகியோரிடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினாா்.

கூட்டத்தில் மொத்தம் 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.