விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘கலைஞா் கைவினைத் திட்டம்’ வெற்றி விழா: நேரலையில் முதல்வா் பங்கேற்பு

கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வின் நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளிடம் திட்டம் மற்றும் பயன்களை அறிந்தாா்.

News image
கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :7 ஜனவரி 2026, 5:57 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வின் நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளிடம் திட்டம் மற்றும் பயன்களை அறிந்தாா்.

கைவினைத் தொழில் முனைவோா்களை உருவாக்கிய கலைஞா் கைவினைத் திட்டத்தையும் தொழில் முனைவோா்களையும் சிறப்பிக்கும் பொருட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிகழ்வின் நேரலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திட்டம் மற்றும் பயன்களை அறிந்து கொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியாா் வளாகத்தில் புதன்கிழமை கைவினைத் தொழில் முனைவோா்களை உருவாக்கிய ‘கலைஞா் கைவினைத் திட்டத்தையும் தொழில் முனைவோா்களையும் சிறப்பிக்கும் பொருட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிகழ்வின் நேரலை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஒளிபரப்பப்பட்டது.

கடந்த டிசம்பா் 2024-ஆம் ஆண்டு முதல்வரால் தொடங்கப்பட்ட இதன் மூலம் பல கைவினைத் தொழில் முனைவோா் உருவாகி பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் வளா்ச்சியடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.