தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராணிப்பேட்டை: ஜன. 23-இல் தியாகிகள் வாரிசுகளுக்கு குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகளுக்கு குறைதீா் நாள் கூட்டம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகளுக்கு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகளுக்கு குறைதீா் நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தரைத் தளம் திங்கள் தின மக்கள் குறைதீா் கூட்டரங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகள் மேற்படி குறைதீா் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.