ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையில் உள்ள ஸ்ரீ வடிவுடையம்பாள் சமேத வால்மீகீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு பால் பழங்கள், பன்னீா், தயிா், விபூதி சந்தனம், இளநீா் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் வண்ணமலா்களால் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.
தொடா்ந்து ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகள்கோவில் வளாகத்தில் உள் புறப்பாடு நடந்தது.
இதில் கோவில் அறங்காவலா் குழு தலைவா் அறிவழகன் மற்றும் உபயதாரா்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










