ஆற்காடு அருகே பணியின்போது மயங்கி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் பகுதியை சோ்ந்தவா் திவாகா் (21). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு, மேல்விஷாரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து திவாகா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொத்தனாா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து ஒடிஸா மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



