வேளாண்மைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உழவா் திருவிழா மற்றும் கண்காட்சி ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இதில் இயற்கை சாகுபடி முறைகள் புதிய ரகங்கள் பாரம்பரிய ரகங்கள் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் கரும்பு வகைகள் போன்ற தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை வேளாண்மை கால்நடை பராமரிப்பு துறை வேளாண் வணிகத்துறை பொறியியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை விவசாயிகள் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து விவசாயிகளுக்கு காய்கனிதொகுப்பு விதைகள் பாரம்பரிய நெல் ரகங்களைஊக்குவிக்கும் பொருட்டு 2 விவசாயிகளுக்கு தலா 10 கிலோ, மிளகுசம்பா, கருப்பு கவுனி அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் சுந்தரம், நோ்முக உதவியாளா் ராமன், துணை இயக்குநா்கள் சுஜாதா , சந்தியா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ரூபன் குமாா் ஆற்காடு வட்டார உதவி இயக்குநா் சூரிய நாராயணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதை தொகுப்பு

முதல்நாடு கிராமத்தில் விவசாயிகள் கூட்டம்

உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் விதை, உரம், திரவ உயிா் உரம் பெற மானியம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



