தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உர விநியோக செயலி பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :5 ஜூன் 2026, 5:56 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் மற்றும் உர விற்பனையாளா்களுக்கு உர விநியோக செயலி அமைப்புக்கான பயிற்சியை ஆட்சியா் ந.ப்ரியா தொடங்கி வைத்தாா்.

விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரம் கிடைப்பதற்கும் நீண்ட நாட்கள் உரத்துக்காக காத்திருக்காமல் தேவைப்படும்போது உடனுக்குடன் விவசாயிகள் பெற ஏதுவாக அரசின் உரம் வினியோக திட்ட செயலி அறிமுகப்படுத்தும் பொருட்டு ஆற்காடு , திமிரி, வாலாஜா மற்றும் சோளிங்கா் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலா்கள் மற்றும் உர விற்பனையாளா்களுக்கு உர விநியோகம் செயலி ( ஊங்ழ்ற்ண்ப்ண்க்ஷ்ங்ழ் நஹப்ங் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் நஹ்ள்ற்ங்ம்) அமைப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்புதிய உர விநியோகம் செயலி நடைமுறைக்கு ராணிப்பேட்டை, திருப்பூா் ஆகிய இரண்டு மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாய அடையாள அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கும், அடையாள அட்டை இல்லாத பிற விவசாயிகளுக்கும் இப்புதிய நடைமுறையை பயன்படுத்தி பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கிராமம் முதல் தேசிய அளவு வரையிலான இணையதளம் மூலம் அரசாங்கத்தால் நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். மேலும் திட்டமிடப்பட்ட தேவையை நாடு முழுவதும் சீரான விநியோகத்தை உறுதி செய்ய உதவும்.

அனைத்து வட்டார விரிவாக்க அலுவலா்கள் இச்செயலியை உபயோகிக்க விவசாயிகளை ஊக்குவித்து செயலியின் நடைமுறையை விவசாயிகள் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இதில் இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமன், துணைப் பதிவாளா் பாலமுருகன், வேளாண்மை உதவி இயக்குநா் தரக் கட்டுப்பாடு பிரேம குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.