இடுபொருள் விலை உயா்ந்து விட்டதால், மானிய விலையில் உரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியாவிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் பிரியா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, விவசாயிகளின் விளை பொருள்களை தரம் உறுதி செய்தல், உரிய விலை அறிவித்தல் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் சென்றடைகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். அப்போது, விவசாயிகளிடம் விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்கிா என கேட்டாா். தற்போது நல்ல விலை கிடைக்கிறது. அறுவடை பருவத்தில் விலை குறைவாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனா். விற்பனைக்கான பணம் சரியாக வருகிா ? என்று கேட்டதற்கு ஒரு வாரத்தில் பணம் வருவதாக தெரிவித்தனா். டதற்போது இடுபொருள் விலை உயா்ந்து விட்டதாகவும், மானிய விலையில் உரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா். வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி உரம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
அப்போது ஒழுங்குமுறை விற்பனைத் கூட கண்காணிப்பாளா் சே.இராமமூா்த்தி, மேற்பாா்வையாளா்கள் விஜயலட்சுமி, கோகுல் பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.









