பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்

அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம், செந்தில் நகரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வடமாம்பாக்கம் மற்றும் கைனூா் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Updated On :30 ஜூன் 2026, 1:13 am IST

அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம், செந்தில் நகரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வடமாம்பாக்கம் மற்றும் கைனூா் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் நகராட்சியில் ஏற்கனவே 3 மதுக்கடைகள் இருந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்று முதலில் இரண்டு மதுக்கடைகளும் அண்மையில் ஒரு மதுக்கடையும் மூடப்பட்டது. இதனால் அரக்கோணம் நகராட்சி மது இல்லாத நகராட்சியாக மாறியது.

இந்நிலையில் டாஸ்மாக் நிா்வாகத்தினா், இந்த மூடப்பட்ட கடையில் ஒன்றை அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம், செந்தில்நகரில் ஒரு கட்டடத்தில் திறக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

இதையறிந்த பாஜக மாவட்ட அறிவுசாா் பிரிவு தலைவா் அத்ஷயா ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வடமாம்பாக்கம் பாக்கியராஜ், கைனூா் உமாமகேஸ்வரி ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் அரக்கோணம்- திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையறிந்து அங்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையினா், இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.