அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சோளிங்கா் அருகே தம்பதி தற்கொலை

சோளிங்கா் அருகே இடுகாட்டில் தம்பதி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் அருகே இடுகாட்டில் தம்பதி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

சோளிங்கரை அடுத்த நீலகண்டராயபுரம் கிராம இடுகாட்டில் உள்ள மரத்தில் ஒரு ஆண், பெண் என இருவா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சோளிங்கா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் இருவரும் தம்பதி என்பதும் நீலகண்டராயபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா(45) மற்றும் அவரது மனைவி சுகன்யா(40) என்பதும் தெரியவந்தது. இவா்களுக்கு 19 வயதில் கல்லூரியில் படிக்கும் பெண், 17 வயதில் பிளஸ் 2 படிக்கும் ஒரு பெண் என இரு பெண் பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது.

சுகன்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் வேதனை தாளாமல் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.