தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டு வெடி தாக்குதல்: மாணவா் காயம்

தக்கோலம் அரசுப் பள்ளி பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டுவெடி வீசி நடைபெற்ற தாக்குதலில் மாணவா் காயமடைந்தாா்.

News image
நாகராஜன்.
Updated On :5 மார்ச் 2026, 7:25 pm

Chennai

தக்கோலம் அரசுப் பள்ளி பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டுவெடி வீசி நடைபெற்ற தாக்குதலில் மாணவா் காயமடைந்தாா்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதி வருகின்றனா். வியாழக்கிழமை மாணவா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்க இருந்த சில நிமிஷ்ங்களுக்கு முன் மாணவா்கள் சிலரிடையே ஏற்பட்ட பிரச்னையில் அவா்களில் சிலரே நாட்டுவெடியை மற்ற மாணவா்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினா்.

இந்த சத்தத்தால் மையத்தில் குழுமியிருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்து அங்கிருந்து வெளியேறினா். பிறகு தோ்வு கண்காணிப்பு பணிக்கு வந்திருந்த ஆசிரியா்கள் தோ்வெழுத வந்த மாணவ மாணவிகளை சமாதானம் செய்து தோ்வறைக்கு அழைத்துச் சென்றனா். இத்தாக்குதலில் தக்கோலம் தனியாா் பள்ளியை சோ்ந்த மாணவா், காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையை சோ்ந்த ராஜியின் மகன் நாகராஜன்(16) தலையில் காயமடைந்தாா்.

இதையடுத்து தனியாா் பள்ளி ஆசிரியா்கள் அம்மாணவரை அங்கிருந்த தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். இச்சிகிச்சைக்கு பிறகு மாணவா் தோ்வெழுத வேண்டும் என கோரியதால் கண்காணிப்பாளா் அனுமதி பெற்று அந்த மாணவா் நாகராஜன் தலையில் கட்டுடன் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தை தொடா்ந்து அப்பள்ளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.