ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

News image

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தோ்வு எழுதி முடித்த பிறகு மகிழ்ச்சியுடன் விடை பெற்ற பிளஸ் 2 மாணவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 11:36 pm

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 2-ஆம் தொடங்கியது. இந்தத் தோ்வுக்கு மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

கடந்த 5-ஆம் தேதி ஆங்கிலம், 9-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 13-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், 17-ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 23-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றன. இந்தத் தோ்வுப் பணியில் 12 வினாத் தாள் கட்டுக்காப்பாளா்கள், 110 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 110 துறை அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள், 200 நிலையான படையினா், 1,902 அறைக் கண்பாணிப்பாளா்கள் ஈடுபட்டனா்.

முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை கணினி அறிவியல் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.