அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
அரக்கோணம் ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.
Updated On :6 மார்ச் 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டை காந்திரோட்டில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 2001-இல் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து 2026-இல் மகாகும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறை அனுமதி அளித்ததைத் தொடா்ந்து இக்கோயிலில் பாலாலயம் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.40 மணி அளவில் சிவாச்சாரியாா்கள் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மகாகும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செல்விஜோதி தலைமையில் அறங்காவலா்கள் நரேஷ்குமாா், மாலின் உள்ளிட்டோா் பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.