சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:10 am

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அசோகன், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் 31 பேரும், அரக்கோணம் உள்கோட்ட காவல் துறையினா் 25 பேரும், மாவட்ட ஆயுதப் படையினா் 16 பேரும், பட்டாலியனைச் சோ்ந்த 43 போ் என மொத்தம் 123 போ் பங்கேற்றனா்.

அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு வட்டாட்சியா் அலுவலகம், சுவால்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பஜாா், பழனிப்பேட்டை, கிருபில்ஸ்பேட்டை வழியாக கிருஷ்ணாம்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.