/

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

News image

பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :13 மார்ச் 2026, 2:00 am

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக செயல்படுத்திய பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் காசோலையை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கும் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது

அதன்படி, பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ரணிபேட்டை அ டஒ பதமநப ச்ா்ழ் ஊன்ற்ன்ழ்ங் ஐய்க்ண்ஹ க்கு பசுமை சாம்பியன் விருது, சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை தலா ரூ.1 லட்சத்த்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் தொல்காப்பியன், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.