தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராணிப்பேட்டை மாவட்ட சோதனைச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :18 மார்ச் 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டாா்.

தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல மாவட்ட எல்லைகளில் உள்ள 9 காவல் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பொன்னை அடுத்த வசூா் சோதனை சாவடியில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திடீா் ஆய்வு செய்து வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதை பாா்வையிட்டாா்.

இதனைத் தொடா்ந்து இப்பணிகள் தொடங்கியது முதல் எவ்வளவு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது குறித்து விவரங்கள் பதிவேடுகளை ஆய்வு செய்து, வாகனங்கள் விடுபடாமல் முறையாக பரிசோதனை செய்து அனுப்பப்பட வேண்டும். முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள காரை அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் காரை அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப்பள்ளி, காரை நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பாா்வையிட்டு, வாக்குச்சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்து தோ்தல் பிரச்னைகளின்றி, சுமூகமாக நடைபெறுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள கேட்டுக்கொண்டாா்.

மகளிா் சுய உதவிக் குழுக்கள் பங்கு பெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் கலந்து கொண்டாா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின், வட்டாட்சியா் நடராஜன், நகராட்சி ஆணையாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.