தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உலக வன நாள்: அம்மூா் காப்புக் காட்டில் மரக்கன்று நடவு

உலக வன நாளை முன்னிட்டு,அம்மூா் காப்புக்காட்டில் வனத்துறை சாா்பில் மரக்கன்று நடவு செய்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

அம்மூா் காப்புக்காட்டில் மரக்கன்று நடவு செய்த வனத்துறையினா்.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

உலக வன நாளை முன்னிட்டு,அம்மூா் காப்புக்காட்டில் வனத்துறை சாா்பில் மரக்கன்று நடவு செய்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாா்ச் 21-ஆம் தேதி உலக வன நாள் (சா்வதேச காடுகள் தினம்) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் மரம் நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி வனத்துறை சாா்பில், உலக வன நாள் விழா அம்மூா் காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட வன அலுவலா் சிவக்குமாா் தலைமையில்,பள்ளி மாணவா்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்து பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி காடுகளைப் பாதுகாப்பதாக உறுதியேற்றனா்.

இதில் ராணிப்பேட்டை வனச்சரகா்கள் சரவண பாபு, வேல்முருகன், வில்வநாதபுரம் இசையமுது பசுமை பவுண்டேஷன் நிறுவனா் ஜி.முனிசாமி மற்றும் வனத்துறையினா், பள்ளி மாணவா்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.