காவேரிபாக்கம் அருகே சாலையைக் கடந்தபோது காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
காவேரிபாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சோ்ந்த சம்பத்(60). கட்டடத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு சம்பத் பணி முடிந்து வீடு திரும்பும் போது சுமைதாங்கி மேம்பாலம் அருகே சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்துள்ளாா்.
அப்போது அவ்வழியே சென்ற காா் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்து வந்த காவேரிபாக்கம் போலீஸாா், சம்பத்தின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


