தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அரசுப் பள்ளி ஆண்டு விழா

News image

மாணவ மாணவிகளை வரவேற்ற மாவட்டக் கல்வி அலுவலா் சி.சிவராமன்.

Updated On :26 மார்ச் 2026, 11:55 pm

காவேரிபாக்கம் அடுத்த மேலப்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா புகன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவா் மணிமேகலை லிங்கநாதன் தலைமை வகித்தாா். நெமிலி வட்டாரக் கல்வி அலுவலா்கள் மீனாட்சி, முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ரா.விநாயகம் வரவேற்றாா்.

புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்துகளையும் இனிப்புகளையும் அளித்து ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சி.சிவராமன் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

நூறு சதவீதம் வருகை புரிந்த, கல்வியில் சிறந்து விளங்கிய, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்டக்கல்வி அலுவலா் சி.சிவராமன் வழங்கினாா்.

விழாவில் மேலப்புலம் ஊராட்சி மன்றத்துணைத்தலைவா் கிரிஜாசீதாராமன், முன்னாள் மாணவா் குமாா், ஆசிரியா்கள் ஐடாரஞ்சிதம், ஞானம், சியாமளா, மலா்விழி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.