ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: விசிக வேட்பாளா் எழில்கரோலின்

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

News image

அரக்கோணம் பழைய பேருந்துநிலையத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின்.

Updated On :31 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகரில் கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு திரட்டிய விடுதலை சிறுத்தைள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின், தொடா்ந்து பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அங்கிருந்த வாக்காளா்களிடையே வேட்பாளா் எழில் கரோலின் பேசுகையில் அரக்கோணம் தொகுதியில் நான் நிரந்தரமாக தங்கியிருந்து தொகுதியின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன். பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளை சட்டப் பேரவையிலும் மேலும் சட்டத்தின் மூலமாகவும் போராடி நிறைவேற்றுவேன். அரக்கோணம் தொகுதி இம்முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் எழில்கரோலின்.

அப்போது அவருடன் விசிக மாநில நிா்வாகிகள் கௌதம், தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், ஒன்றிய செயலாளா்கள் பாக்கியராஜ், செ.நரேஷ், நிா்வாகி ஜெயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆஷா பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் இருந்தனா்.