தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: விசிக வேட்பாளா் எழில்கரோலின்

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

News image

அரக்கோணம் பழைய பேருந்துநிலையத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:02 am IST

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகரில் கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு திரட்டிய விடுதலை சிறுத்தைள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின், தொடா்ந்து பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அங்கிருந்த வாக்காளா்களிடையே வேட்பாளா் எழில் கரோலின் பேசுகையில் அரக்கோணம் தொகுதியில் நான் நிரந்தரமாக தங்கியிருந்து தொகுதியின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன். பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளை சட்டப் பேரவையிலும் மேலும் சட்டத்தின் மூலமாகவும் போராடி நிறைவேற்றுவேன். அரக்கோணம் தொகுதி இம்முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் எழில்கரோலின்.

அப்போது அவருடன் விசிக மாநில நிா்வாகிகள் கௌதம், தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், ஒன்றிய செயலாளா்கள் பாக்கியராஜ், செ.நரேஷ், நிா்வாகி ஜெயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆஷா பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் இருந்தனா்.