ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானத்தை கூட்டுறவுத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான வி.காந்தி ராஜ் தொடங்கி வைத்தாா்.
தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட வேண்டும் எனவும் அந்நாளில் ஏழை எளியோா் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தவெகவினா் உணவு வழங்க வேண்டும் எனவும் தவெக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தாா்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் தொடங்கி வைத்தாா்.
இதில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்டோா் உண்டதாக கட்சியினா் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில் தவெக அரக்கோணம் நகர செயலா் ரமேஷ் மற்றும் அரக்கோணம், சோளிங்கா் பகுதி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.









