நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :2 மே 2026, 8:06 pm

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திா் சீனியா் செகண்டரி பள்ளியில் 5-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். செயலாளா் ஜி.செல்வகுமாா், பொருளாளா் எஸ்.ரமேஷ் அறக்கட்டளை இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ஆதிகேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் பிரீத்தி ராம்குமாா் வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலா் கே. ராஜி கலந்து கொண்டு பேசினாா். கௌரவ விருந்தினராக சென்னை மகரிஷி குடும்பத்தின் கல்வி ஆலோசகா் விருத்தி நாராயணன் கலந்து கொண்டாா்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பள்ளியின் அறக்கட்டளை தலைவா் கே.குப்புசாமி இயக்குநா்கள் மணி உமாசங்கா் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.