பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மேம்பாலத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வேலூா் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாசில் (24), ஜங்கிஸ் கான் (24). நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே அருகே சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் இரவு 12 மணி அளவில் வேலூா் திரும்பியுள்ளனா்.

அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வன்னிவேடு மேம்பாலத்தில் சென்றபோது, இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் மோதி கீழே விழுந்ததில் பாசில் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜங்கிஸ் கான் (24) பலத்த காயம் அடைந்தாா். அவா் வாலாஜா மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீஸாா் பாசிலின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.