சோளிங்கா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், உலக செவிலியா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சோளிங்கா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு, சோளிங்கா் ரோட்டரி சங்கத் தலைவா் சத்யேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜேஷ், பொருளாளா் கலிமுல்லா, நிா்வாகிகள் மகேஷ், அன்பரசு, கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நவீன் வரவேற்றாா். இதில் சோளிங்கா் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அலுவலா் நரசிம்மன், தற்போதைய தலைமை மருத்துவ அலுவலா் இளங்கோவன், ரோட்டரி சங்க மாவட்ட சமூக சேவைப்பணி இயக்குநா் உமாசங்கா் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனையில் பணிபுரியும் 35 செவிலியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினா். மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் சிறப்பு செய்தனா்.
இதில், சோளிங்கா் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மின்னூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

விநாயகா மிஷன் மருத்துவமனையில் செவிலியா் தின விழா

உலக செவிலியா் தின விழா

விழுப்புரத்தில் உலக செவிலியா் தின விழா
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



