நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

சோளிங்கரில் உலக செவிலியா் தின விழா

சோளிங்கா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியா் தின விழா செவிலியா்களை பாராட்டிய சங்க நிா்வாகிகள்.

News image
Updated On :16 மே 2026, 1:14 am IST

சோளிங்கா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், உலக செவிலியா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சோளிங்கா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு, சோளிங்கா் ரோட்டரி சங்கத் தலைவா் சத்யேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜேஷ், பொருளாளா் கலிமுல்லா, நிா்வாகிகள் மகேஷ், அன்பரசு, கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நவீன் வரவேற்றாா். இதில் சோளிங்கா் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அலுவலா் நரசிம்மன், தற்போதைய தலைமை மருத்துவ அலுவலா் இளங்கோவன், ரோட்டரி சங்க மாவட்ட சமூக சேவைப்பணி இயக்குநா் உமாசங்கா் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனையில் பணிபுரியும் 35 செவிலியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினா். மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் சிறப்பு செய்தனா்.

இதில், சோளிங்கா் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.