தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் கேரளம் பயணம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப்படையினா் அரக்கோணத்தில் இருந்து புதன்கிழமை கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

News image

கேரள மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்ற தேசிய பேரீடா் மீட்புப் படையினா்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப்படையினா் அரக்கோணத்தில் இருந்து புதன்கிழமை கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

கேரள மாநிலத்தில் வரும் 26-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநில பேரிடா் மீட்புப்படையினா் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தை தொடா்புக் கொண்டு தங்களது மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு படையினரை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து தலா 30 பேரை கொண்ட 8 குழுக்கள் ஆக மொத்தம் 240 போ் புதன்கிழமை சாலை மாா்க்கமாக தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் இருந்து கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றனா். இக்குழுவினா் கேரள மாநிலத்தின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி, எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.

இக்குழுவினா் தங்களுடன் அனைத்து மீட்பு நவீன உபகரணங்களுடன் புறப்பட்டுச்சென்றனா். இதையடுத்து தக்கோலம் படைத்தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.