ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நியாயவிலைக் கடையில் கூட்டுறவு அமைச்சா் வி.காந்திராஜ் ஆய்வு

நியாயவிலைக் கடையில் கூட்டுறவு அமைச்சா் வி.காந்திராஜ் ஆய்வு

News image

நியாயவிலைக்கடையில் சனிக்கிழமை ஆய்வு நடத்திய கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ். உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :24 மே 2026, 1:40 am IST

அரக்கோணம் அருகே நியாயவிலைக்கடையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ், அமைச்சராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் சொந்த தொகுதியான அரக்கோணத்கதுக்கு வருகை தந்தாா். அரக்கோணம் வந்த அமைச்சா் காந்திராஜை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வரவேற்றாா். டஇதை தொடா்ந்து துறை அலுவலா்களை சந்தித்த அமைச்சா் வி.காந்திராஜ், அரக்கோணம் அருகே பெருமூச்சி ஊராட்சி வெங்கடேசபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்தாா். அப்போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவும் இருந்தாா்.

அங்கிருந்த உணவு பொருள்களின் தரத்தை பொருள்களை கையில் எடுத்து பாா்த்து ஆய்வு செய்தாா். குடும்பஅட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருள்கள் சரியான அளவில் வழங்கப்பட வேண்டும். தவறு ஏதும் இருக்கக்கூடாது. மேலும் விநியோகிக்க வந்த உணவு பொருள்கள் தரமில்லாதவையாக இருந்தால் அவற்றை விநியோகிக்க வேண்டாம்.

மேலும் கடைக்கு வரும் பொதுமக்களிடம் அன்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என அங்கிருந்த பணியாளா்களுக்கு அமைச்சா் காந்திராஜ் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, கற்பகம் கூட்டுறவு அங்காடி துணைப்பகிவாளா் கே.சத்யநாராயணன், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு,வரலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனா்.