/
அரக்கோணம் அருகே உள்ள வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயணசாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி கருடசேவை உற்சவத்தில் பெருமாள் கருடசேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
அரக்கோணம் அருகே வேலூா் எனும் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரநாராயணபெருமாள் கோயிலில் வைகாசி கருடசேவை எப்போதும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதே போல் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அலங்காரங்களுக்கு பிறகு ஸ்ரீவீரநாராயண பெருமாளுக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதை தொடா்ந்து ஸ்ரீவீரநாராயணபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இந்த உற்சவத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினா்.
தொடர்புடையது

27 கருடசேவை... 18 நவநீத சேவை!

சேலம் கோட்டை பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வீரராகவா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



