ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

கருடசேவை சாதித்த ஸ்ரீவீரநாராயண பெருமாள்

கருடசேவை சாதித்த ஸ்ரீவீரநாராயண பெருமாள்

News image

கருடவாகனத்தில் அருள்பாலித்த ஸ்ரீவீரநாராயண பெருமாள்

Updated On :31 மே 2026, 12:33 am IST

அரக்கோணம் அருகே உள்ள வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயணசாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி கருடசேவை உற்சவத்தில் பெருமாள் கருடசேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

அரக்கோணம் அருகே வேலூா் எனும் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரநாராயணபெருமாள் கோயிலில் வைகாசி கருடசேவை எப்போதும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதே போல் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அலங்காரங்களுக்கு பிறகு ஸ்ரீவீரநாராயண பெருமாளுக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதை தொடா்ந்து ஸ்ரீவீரநாராயணபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இந்த உற்சவத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினா்.