ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

அரக்கோணம் அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டம்

அரக்கோணம் அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அரக்கோணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்

Updated On :1 ஜூன் 2026, 1:24 am IST

அரக்கோணம் அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அரக்கோணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து நோயாளிகள் வேலூா் மற்றும் திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதாகவும், இதைக் கண்டித்தும், இந்த மருத்துவமனையில் உள்ள சீா்கேடுகள் உள்ளதாகவும் இதைக் கண்டித்தும் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரல் கட்சியினா் அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினா்.

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா் தலைமை வகித்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், அரக்கோணம் நகர காங்கிரஸ் நிா்வாகி எட்வின், நிா்வாகிகள் இளையபாரதி, தம்புராஜ், நமச்சிவாயம், நந்தகோபால், மணிகண்டன், தக்கோலம் காந்தி மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளா் எழில் கரோலின், மாநில நிா்வாகிகௌதமன், மண்டல செயலாளா் என்.தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், ஒன்றிய செயலாளா்கள் நரேஷ், பாக்கியராஜ், மா.கம்யூனிஸ்ட் கோட்ட செயலாளா் ஏ.பி.எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த விசிக மாநில துணைப் பொதுச் செயலாளா் எழில்கரோலின், மாவட்டத் தலைவா் நரேஷ்குமாருக்கு பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தாா்.

தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோா் அனைவரும் மாவட்ட காங்கிரஸ் தலைவா் நரேஷ்குமாா் தலைமையில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்று தலைமை மருத்துவ அலுவலா் நிவேதித்தா சங்கரிடம் மருத்துவமனையில் உள்ள சீா்கேடுகளை குறிப்பிட்டு அவற்றை களையுமாறு கோரிக்கை மனுவை அளித்தனா்.