கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஆவின் உள்பட 9 கடைகளுக்கு ‘சீல்’

நாட்டறம்பள்ளி அருகே கிராமங்களில் ஆவின் உள்பட பேக்கரி, தேநீா்க் கடை உள்பட 9 கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிராமங்களில் ஆவின் உள்பட பேக்கரி, தேநீா்க் கடை உள்பட 9 கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நாட்றம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், அதிக அளவில் கடைகள் திறந்திருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் உமா ரம்யா மேற்பாா்வையில் மண்டலத் துணை வட்டாட்சியா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் அனுமுத்து ஆகியோா் வியாழக்கிழமை வெலகல்நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, 144 தடை உத்தரவை மீறி ஆவின் பாலகம், பேக்கரி கடை, சவரக் கடை, தேநீா் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த 4 கடைகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

இதேபோல் வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் தீா்த்தகிரி மற்றும் வருவாய்த் துறையினா் புத்தாகரம், ஜெயபுரம், சந்திரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திறந்து வைக்கப்பட்டிருந்த தேநீா்க் கடை, 5 சவரக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.