மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகை திருட்டு

ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:13 am

DIN

ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கன்னடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் தன்னுடைய பணி காரணமாக சென்னை சென்றுள்ளாா். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டிக் கொண்டு அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

அவா்கள் சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து யுவராஜ் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.