

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 2 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடி வட்டவழங்கல் அலுவலா் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை மாலை மதனாஞ்சேரி பகுதியில் ரேஷன் அரிசிக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மதனாஞ்சேரி சங்கத்து வட்டம் அருகில் சாலையோரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்தனா். அவற்றில் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டறிந்தனா்.
விசாரணையில், ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக அந்த மூட்டைகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு 18 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.