அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆம்பூர் அருகே லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

News image
ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான வாகனங்கள்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:11 am

DIN

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உறவினர் வீட்டிற்கு சென்று காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். 

Story image
Story image

அப்போது அவர்களின் கார் முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது கார் திடீரென மோதியது. அதைத்தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் பிக்கப் வாகனமும் அடுத்தடுத்து மோதியது. 

Story image

இதில் காரில் சிக்கி சென்னையைச் சேர்ந்த கோகுல், யோகராஜ் ஆகியோர் உட்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Story image

இதில் சிகிச்சை பலனின்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கோகுல் உயிரிழந்தார். அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யோகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Story image

இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.