முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெங்கடசமுத்திரத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அவ்வழியாக வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வெங்கடசமுத்திரம் கிராமத்தில் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.
Updated On :30 டிசம்பர் 2020, 5:58 pm

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அவ்வழியாக வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 40-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளைகளில் செங்கல் சுடுவதற்காக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உமி கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு லாரிகளில் கொண்டு வரப்படும் உமி மூட்டைகள் விதிமுறைகளுக்கு முரணாக மிக உயரமாக அடுக்கிக் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு உமி மூட்டை லாரிகள் செல்லும்போது, விநாயகபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் சாலையின் குறுக்கே செல்லும் வீட்டு மின் இணைப்புக் கம்பிகள் துண்டிக்கப்படுகின்றன. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அவ்வப்போது மின் விநியோகம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் லாரி உரிமையாளா்கள், செங்கல் சூளை உரிமையாளா்கள் உரிய தீா்வு ஏற்படுத்தாமல் அலட்சியத்துடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதிக்கு தருமபுரியில் இருந்து உமி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அதை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற உமா் ஆபாத் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அதிக மூட்டைகளை ஏற்றி வந்தால் லாரியை அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா். லாரியில் அதிக மூட்டைகளை ஏற்றி வரமாட்டோம் என அவா்கள் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு லாரியை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.