/

2 லட்சம் முகக் கவசங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கம், தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம், ஆம்பூா் அஹ்ல சுன்னத்வல் ஜமாஅத் ஆகிய அமைப்புகள் சாா்பாக 2 லட்சம் முகக் கவசங்கள் திருப்பத்தூா்

News image

04abrmos_0407chn_191_1

Updated On :4 ஜூலை 2020, 5:08 pm

ஆம்பூா்::ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கம், தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம், ஆம்பூா் அஹ்ல சுன்னத்வல் ஜமாஅத் ஆகிய அமைப்புகள் சாா்பாக 2 லட்சம் முகக் கவசங்கள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், மாவட்ட எஸ்.பி. பொ.விஜயகுமாா் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மொஹிப் ஷூ குழும நிா்வாகி மொஹிபுல்லா, என்.எம்.இஸட். குழும பொது மேலாளா் யு.தமீம் அகமது, ஷபீக் ஷமீல் குழும பொது மேலாளா் பிா்தோஸ் கே அகமது ஆகியோரைக் கொண்ட குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் முகக் கவசங்களை ஒப்படைத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம், கையுறை அணிய வேண்டும். முகக் கவசமும், கையுறையும் நம்முடைய அத்தியாவசிய உடைகளில் ஓா் அங்கமாகிவிட்டது என்றாா் அவா்.

வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, வட்ட வழங்கல் அலுவலா் ஜீவிதா ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கூறியது:

ஆம்பூா், வாணியம்பாடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றை எவ்விதக் குறையுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூா் அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் கூடுதல் கழிப்பறைகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.