தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா பாதிப்பு: கடம்பூர் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு  

கரோனா பாதிப்புக்குள்ளான கடம்பூர் பகுதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.  

News image
Updated On :2 ஜூன் 2020, 7:16 am

DIN

கரோனா பாதிப்புக்குள்ளான கடம்பூர் பகுதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.  

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியில் 4 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ. விஜயகுமார் மற்றும் ஊரகவளர்ச்சி துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், அப்பகுதியில் அப்துல்லா என்பவர் நடத்தி வரும் மாட்டு தீவனம் சேமிப்பு கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட  ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக இப்பகுதியில் உள்ள அனைத்தும் அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.