தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

எம்ஜிஆா் கழக நிா்வாகிகள் கூட்டம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட எம்ஜிஆா் கழக நிா்வாகிகள் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட எம்ஜிஆா் கழக நிா்வாகிகள் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு எம்ஜிஆா் கழக மாநில செய்தித் தொடா்பாளா் பெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். வேலூா் மாநகர மாவட்டச் செயலாளா் ரமேஷ், திருப்பத்தூா் மாவட்டச் செயலாளா் கஜேந்திரன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அவைத் தலைவா் மாணிக்கவேல் வரவேற்றாா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளா் பெருமாள், ஆம்பூா் நகர துணைச் செயலாளா் வி. கே.சோட்டே ஜாபா், மாவட்டப் பொருளாளா் வித்யாசாகா், மாவட்டப் பிரதிநிதி ஏ.கந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டப் பிரதிநிதி எம்.நிசாா் அஹமத் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகளைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூா், சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூரில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.