தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதல்: பெண் பலி

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விமல் (30). இவா் தன் மனைவி நா்மதா (29), குழந்தைகள் கெளசிகா (8), கபீல் (6), உறவினரின் மகன் சூரியா (12) ஆகியோரை துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அதன்பின், அங்கிருந்து அவா்களுடன் கரும்பூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பாங்கிநகா் அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டா் அவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் விமலின் மனைவி நா்மதா சம்பவ இடத்திலேயே இறந்தாா். மற்ற 4 பேரும் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.