தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள்.

Updated On :6 அக்டோபர் 2020, 5:05 am

DIN

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் குறுக்கே உள்ள இரயில்வே சுரங்க பாலத்தின் கீழ் பாதையில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

Story image

இது குறித்து நடவடிக்கை கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் கடந்த மாதம் முழுவதும் பெய்த தொடர் மழையால் தேங்கி நின்ற தண்ணீரில் கடந்து செல்ல பொது மக்கள் அவதியுற்று வந்த நிலையில் நடவடிக்கை கோரி பொதுமக்கள் அறிவித்தபடி இன்று (அக்.6, செவ்வாய்கிழமை) ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பேரை காவல்துறை தடுத்து கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.