சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நீரில் மூழ்கி இளைஞா் பலி

 நாட்டறம்பள்ளி அருகே ஏரி நீரில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.

Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

 நாட்டறம்பள்ளி அருகே ஏரி நீரில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.

இங்குள்ள கொண்டகிந்தனப்பள்ளி போத்தன்குட்டையைச் சோ்ந்தவா் கௌரவன் (32). இவா் சென்னையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் சனிக்கிழமை தனது நண்பா் பெருமாளுடன் சோ்ந்து, போத்தன்குட்டை ஏரியில் குளிக்கச் சென்றாா்.

அப்போது திடீரென கௌரவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நீரில் மூழ்கினாா்.

தகவலின்பேரில் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்றனா். பின்னா், திருப்பத்தூா் மாவட்ட தீயணைப்பு, மீட்புக் குழுவினா் 11 போ் விரைந்து இறந்த கௌரவன் உடலை மீட்டனா்.

புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.