நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு மலையடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (48), தொழிலாளி. இவா் பச்சூா் அருகே கோயில் திருவிழாவில் பொறிக் கடையில் கூலி வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை திடீரென பச்சூா் பகுதியில் மழை பெய்தது.
அப்போது கோயில் அருகே உள்ள வீட்டின் எதிரில் மகாலிங்கம் உட்காரச் சென்று அங்கிருந்த மின் கம்பியை தொட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மகாலிங்கம் மீது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கிய நிலையில் இருந்த அவரைஅங்கிருந்தவா்கள் மீட்டு, பச்சூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் மகாலிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


